இடுகைகள்

சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு

படம்
பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக ஜெயலட்சுமி தெரிவித்தார். பாஜக மாநில மகளிரணி துணைத் தலைவரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சினேகன் மீது  வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி, தன்னுடைய சினேகம் அறக்கட்டளை தொடர்பாக கடந்த மாதம் பாடலாசிரியர் சினேகன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதோடு மட்டுமல்லாமல் தன்னை பொதுவெளியில் அவதூறாக பேசியுள்ளார். அவரோட அறக்கட்டளை பெயரில் தான் பணம் வசூலிப்பதாக பொய்யாக சினேகன் பேசியுள்ளார். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த விசாரணையில் எழும்பூர் நீதிமன்றம் பாடலாசிரியர் சினேகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என  நீதிமன்றம் உத்தரவிட்டதாக ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார். இதையும் படிக்க: `என் மனைவிக்கு பாலியல் தொல்லை’ பாஜக பொதுச்செயலாளர் மீது சசிகலா புஷ்பா கணவர் பகிரங்க புகார் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimur

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

திருப்பதியில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் கோலாகல தொடக்கம் - 2 ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதிகளில் வாகன சேவை https://ift.tt/j73BcWQ

படம்
திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. மேள தாளங்கள் முழங்க, வேத கோஷங்களுடன் ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை அர்ச்சகர்கள் ஏற்றினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

’வெந்து தணிந்தது காடு’.. வெளியானது மல்லிப்பூ பாடலின் வீடியோ! ரசிகர்கள் மகிழ்ச்சி!

படம்
நடிகர் சிலம்பரசன் நடிப்பில் கடந்த 15-ம் தேதி அன்று வெளியான வெந்து தணிந்தது காடு படத்தில் இடம்பெற்று ரசிகர்கள் மனதைக் கொள்ளையடித்த ஹிட் பாடலான ‘மல்லிப்பூ’ பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் பாடல் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பிரமாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. பாடலை பாடி இருந்த பின்னணி பாடகர் மதுஸ்ரீயின் காந்தக்குரலும் அதற்கு முக்கியக் காரணம். ஏ.ஆர். ரகுமான் இசையில், தாமரையில் தனித்துவம் மிக்க எழுத்தில் வெளியாகி இருந்த இப்பாடலுக்கு நடன இயக்குநராக பிருந்தா பணியாற்றி இருந்தார். பிரிந்துள்ள கணவனை நினைத்து மனைவி ஏக்கத்துடன் பாடும் பாடலை துள்ளல் நடனத்துடன் உயிருட்டி இருந்தார் பிருந்தா. இதன் வீடியோ வெர்ஷனை ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்த நிலையில், இன்று அதன் வீடியோ வெர்ஷனை வெளியிட்டு ரசிகர்களை இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தி இருக்கிறது படக்குழு. மல்லிப்பூ பாடலில் பாடலாசிரியர் தாமரை வரிகளில் கையாண்டுள்ள தனித்துவ அம்சங்கள் மற்றும் பாடலில் ‘அடடே!’ அம்சங்கள் குறித்து நமது புதிய தலைமுறை தளத்தில் நெடுங்கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. அதைப் படிக்க-> “அங்க நீயும் இங்கு நானும் எ

நடிகர் விஷால் வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் - உடைந்த கண்ணாடிகள்!

படம்
காரில் வந்த சிலர் நடிகர் விஷால் வீட்டின் மீது கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர். நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் சென்னை அண்ணா நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (26/09/2022) இரவு சிவப்பு நிற காரில் வந்த சிலர் நடிகர் விஷால் வீட்டினை கற்கள் கொண்டு தாக்கியுள்ளனர். இதில், விஷாலின் வீட்டு கண்ணாடிகள் சேதமாகியுள்ளன, இவை அனைத்தும் விஷால் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து இன்று நடிகர் விஷால் சார்பில் அவரின் மேலாளர் ஹரிகிருஷ்ணன் சென்னை கே4 அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றும் அளித்துள்ளார். படப்பிடிப்பிற்காக நடிகர் விஷால் வெளியூர் சென்றுள்ள சூழ்நிலையில் இந்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளது. இதையும் படிக்க: சென்னை: பெண் மாணவ நிருபருக்கு பாலியல் தொல்லை – உபர் ஆட்டோ ஓட்டுநர் கைது Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

‘நானே வருவேன்’ செல்வராகவன் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

படம்
இயக்குநர் செல்வராகவனின் வீட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திடீரென சென்றநிலையில், இந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தனுஷ் நடிப்பில், செல்வராகவன் இயக்கியுள்ள ‘நானே வருவேன்’ படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் சீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் நன்றாகவே விற்பனை செய்யப்பட்டு இருப்பதாகவே கூறப்படுகிறது. மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தோடு இந்தப் படம் மோதவுள்ளநிலையில், இந்தப் படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்துஜா ரவிச்சந்திரன், யோகி பாபு, பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்வீடனைச் சேர்ந்த எல்லி அவ்ரம் இந்தப் படத்தின் வாயிலாக தமிழில் அறிமுகமாகிறார். இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் வீட்டிற்கு தமிழ்நாடு முதல்வர் ம

பிரபாஸின் `ஆதிபுருஷ்’ பட டீசர் அயோத்தியில் வெளியீடு - படக்குழு அறிவிப்பு!

படம்
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில், பிரம்மாண்டாக உருவாகியுள்ள ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தின் டீசர் அயோத்தியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன், சைஃப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ள படம் `ஆதிபுருஷ்’. இந்தப் படம் இந்தி - தெலுங்கு என இருமொழிகளில் பைலிங்குவல் படமாக தயாராகி வருகிறது. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டுக்கான வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு நிகழ்வு அக்டோபர் 2-ம் தேதி, உத்திரப்பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் நடைபெறவுள்ளது. இந்தப் படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. பிரபாஸ், ராகவா என்ற பெயரில் ராமராகவும், க்ரித்தி, ஜானகி என்ற பெயரில் சீதாவாகவும், சைஃப் அலிகான், லங்கேஷ் என்ற பெயரில் இராவணனாகவும் நடித்துள்ளனர். எனவே ராமரின் பிறப்பிடமாக கருதப்படும் அயோத்தியில் இப்படத்தின் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. இதற்கான ஏற்பாடுகளை பிரம்மாண்டமான முறையில் செய்து வருகிறது படக்குழு. இதனைப் படத்தின் இயக்குநர் ஓம் ராவத் ட்வீட்