இடுகைகள்

நயன்தாரா, விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் விசாரணை அறிக்கை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

படம்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகைத் தாய் விவகாரத்தில், தனியார் மருத்துவ மையத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருமணம் முடிந்து 4 மாதங்களில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அண்மையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி அறிவித்தது சர்ச்சையை கிளம்பியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் உத்தரவின் பேரில், மருத்துவத் துறை சேவைகள் துணை இயக்குநர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணை அறிக்கை நேற்று வெளியானது. அதில், ஐசிஎம்ஆர்-ன் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி நயன்தாரா -விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக விசாரணை அறிக்கை வெளியானது. எனினும், சிகிச்சையளிக்கப்பட்ட தனியார் மருத்துவமனையில் தம்பதியருக்கு அளித்த சிகிச்சை குறித்த விபரங்கள் மற்றும் வாடகைத்தாயின் உடல் நிலை குறித்த ஆவணங்கள் முறையாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஆனால் இதுகுறித்த ஆவணங்கள் சரியான வகையில் மருத்துவமன

‘எனக்கு கல்யாணம்ங்க’- சந்தோஷத்தில் ஹரிஷ் கல்யாண்

படம்
நடிகர் ஹரிஷ் கல்யாண் இன்று மதியம் தனது திருமணம் குறித்து அறிவிக்க பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண், ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு பல படங்களில் நடித்தாலும் ‘ப்யார் பிரேமா காதல்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் தனக்கென ஒரு இடம் பிடித்தார். இதற்கிடையில் கடந்த அக்டோபர் 5-ம் தேதி தனக்கும், நர்மதா உதயகுமாருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் நாளை தனது திருமணம் நடக்க இருப்பதாக செய்தியாளர் சந்திப்பில்  ஹரிஷ்  கல்யாண்  தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய ஹரிஷ்    கல்யாண் , "வழக்கமாக ஆடியோ, டீசர், ட்ரெய்லர் வெளியீட்டில் தான் பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக என் வாழ்வின் முக்கியமான ஒரு விஷயத்திற்காக சந்திக்கிறேன். எனக்கு நாளை காலை 9 - 10.30 மணிக்கு, திருவேற்காட்டில் (GPN Palace) திருமணம் நடைபெற உள்ளது. இந்த இனிமையான செய்தியை நேரில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய வாழ்வின் ஒவ்வொரு படியிலும் ஊடக நண்பர்களின் பங்கு

‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிப்பதை உறுதிசெய்த கன்னட பிரபலம்-தனுஷ் குறித்து சுவாரஸ்ய தகவல்

படம்
தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில், கன்னட திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகரான ஷிவ ராஜ்குமார் நடிப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியான நிலையில், நேர்காணல் ஒன்றின் மூலம் அதனை அவர் உறுதிசெய்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட திரையுலக பிரபலமான ஷிவ ராஜ்குமார் நடிப்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடிக்கவுள்ளதாக நேர்காணல் ஒன்றின் வாயிலாக, நடிகர் ஷிவ ராஜ்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேர்காணலில் பேசியபோது, “எனக்கு மிகவும் பிடித்தவர் தனுஷ். அவருடைய எல்லா திரைப்படங்களையும் பார்த்திருக்கிறேன். தனுஷ் நிறைய விஷயங்களில் என்னை அப்படியே நினைவுப்படுத்துகிறார். உண்மையில் சொல்லப்போனால், அவர் என்னைப் போன்று உள்ளார். இல்லையெனில் நான் அவரைப் போன்று உள்ளேன். என்னில் அவரையும், அவரில் என்னையும் பார்க்கின்றேன். அவருடைய குறும்புத்தனம், அவர் தன் ந

வசூலில் முந்தும் கார்த்தியின் ‘சர்தார்’ - சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் நிலவரம் என்ன?

படம்
கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படம் வசூலில் நாளுக்குநாள் சரிவை சந்தித்து வருகிறது. சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’, ‘டான்’ ஆகியப் படங்கள் வியாபார ரீதியாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படத்திற்கும் அதிகளவிலான எதிர்பார்ப்பு நிகழ்ந்தது. மேலும், தெலுங்கு திரையுலக இயக்குநர் கே. அனுதீப் இயக்கத்தில், தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் இந்தப் படம் உருவானநிலையில், தீபாவளியை முன்னிட்டு கடந்த 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் இந்தப் படம் கடந்த 5 நாட்களில் 38 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம், சிவகார்த்திகேயனுக்கு தீபாவளி பண்டிகை தினத்தில் முதன்முதலாக வெளியான திரைப்படமாகும். எனினும், முதல்நாளில் போதிய வரவேற்பு கிடைக்காததும், கலவையான விமர்சனங்களை பெற்றதாலும் விடுமுறை தினத்திலும் ‘பிரின்ஸ்’ திரைப்படம் ரசிகர்களை ஈர்க்காமல், வசூலில் பின்தங்கி காணப்ப

திருச்சி ரேஷன் கடைகளில் 231 காலிப்பணியிடங்கள் - தேர்வு இல்லை... விண்ணப்பிக்க முழு விவரம்!

படம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 231 காலி பணியிடங்கள் இருக்கின்றன. இதற்கு எழுத்துத் தேர்வு இல்லாமல் ஆட்ககள் நிரப்பட உள்ளனர். இது குறித்து திருச்சி மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “திருச்சி மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 231 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://www.drbtry.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே 2022 நவம்பர் 14ஆம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் ( www.drbtry.net ) வெளியிடப்பட்டுள்ளன.  அதன், விரிவான அறிவிக்கை மற்றும் வ

`தளபதி 67-ல நடிக்கிறேனா? கைதி 2 ஷூட்டிங் எப்போன்னா...’- சர்தார் விழாவில் நடிகர் கார்த்தி

படம்
தளபதி 67 படத்தில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் நடிகர் கார்த்தி. சர்தார் படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நேற்று மாலை சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் லக்ஷ்மன், இயக்குநர் மித்ரன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ஒப்பனைக் கலைஞர் பட்டணம் ரஷீத், சண்டைப் பயிற்சியாளர் திலீப் சுப்பராயண், ஆடை வடிவமைப்பாளர் பிரவீன், கலை இயக்குநர் கதிர், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ், படத்தொகுப்பாளர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பேசும் போது, “முதலில் கார்த்திக்கு வாழ்த்துகள். தொடர்ச்சியாக மூன்று ஹிட்ஸ், மூன்றும் வெவ்வேறு ஜானர் படங்கள். சர்தாரில் ஏறுமயிலேறி பாடலை கார்த்தி பாடினார். அதற்காக 7 மணிநேரம் ரெக்கார்டிங் நடந்தது. அவ்வளவு கடினமான பாடலை பாடிக் கொடுத்தார். இந்தக் கதை சொல்லும் போது இதை எடுப்பது மிகக் கடினம் எனத் தோன்றியது. ஆனால் வெற்றிகரமாக இதை எடுத்து முடித்தார் மித்ரன். மித்ரன் ஒரு டாஸ்க் மாஸ்டர். என்ன காட்சிக்கு எப்படி இசை வேண்டும் என சொல்லி சொல்லி வாங்குவார். சில சமயம் வாயிலேயே வாசித்து

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்