கிறிஸ்துமஸ்: பழமை மாறாத போத்தனூர் புனித மாற்கு தேவாலயம்! https://ift.tt/30UGAGg

1900-ம் ஆண்டுகளில் போத்தனூர் பகுதியில் வசித்த, ஆங்கில ப்ரோடஸ்டன்ட் சமூகத்தினரின் வழிபாட்டுக்காகவும், புனிதப் பணிக்காகவும் 1918-ல் போத்தனூர் ரயில்வே காலனியில் தூய மாற்கு தேவாலயம் கட்டத் தொடங்கினர். தேவாலய கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம் மலபார் பகுதியில் இருந்து செந்நிற கற்கள் கொண்டுவரப்பட்டன. தரைக்கு டெரகோட்டா டைல்ஸ் பதிக்கப்பட்டது. இந்த ஆலயம் மெட்ராஸ் லார்டு பிஷப்பால் 1919 ஜூலை 24-ம் தேதி அர்ப்பணிக்கப்பட்டது.

நூறு ஆண்டுகளைக் கடந்தும் பழமை மாறாமால் இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது இந்த ஆலயம். இதன் கட்டுமான அமைப்பு மிகவும் அழகானது. தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் கைகளால் கட்டப்பட்ட போதிலும், மிகுந்த கலை நுட்பத்துடன் அமைத்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்