இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சிவகார்த்திகேயனுடன் இணையும் சாய் பல்லவி

படம்
’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் நடிகை சாய் பல்லவி இணைகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் 25 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் ‘டான்’ தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தெலுங்கில் வெற்றிபெற்ற ‘ஜதிரத்னலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் படம், நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கும் ‘சிவகார்த்திகேயன் 21’ உள்ளிட்டப் படங்களில் நடிக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் நாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தில் சாய் பல்லவின் நடிப்பும் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ’சிவகார்த்திகேயன் 21’ படத்தில் சாய் பல்லவி இணைவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் தெரிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சாய் பல்லவி தமிழில் கடைசியாக ‘பாவகதைகள்’ ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News |

மருத்துவ பொதுப்பிரிவு கலந்தாய்வு - முதல் நாளில் 3,824 மாணவர்கள் விண்ணப்பம்

படம்
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 10,461 மாணவர்களில் முதல் நாளில் 3824 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். 2021-22 ஆம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வின் முன் பதிவு நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது. Www.tnmedicalselection.org என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த முன்பதிவில் பங்கேற்று கலந்தாய்விற்கு விண்ணப்பிக்கும் படி ஏற்கனவே மருத்துவக் கல்வி இயக்ககம் 10,461 பேருக்கு அழைப்புவிடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று காலை 10 மணி முதல் சுமார் 6 மணி நிலவரப்படி 3824 பேர் முன்பதிவு செய்துள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இது ஆன்லைன் விண்ணப்பித்தல் முறை என்பதால் இரவு பகலாக வரும் 1 ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை மாணவர்கள் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம். எனவே மீதமுள்ள மாணவர்கள் கொடுத்திருக்கும் காலஇடைவெளிக்கு முன்னதாக விண்ணப்பித்துவிடும்படி மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து வரும் 2 ஆம் தேதி காலை 8 மணியளவில் மாணவர்கள் விருப்பமான மருத்துவக் கல்லூரிகளை தேர்வு செய்யும

மார்ச்சில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’

படம்
நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ வெளியீட்டுத் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்தது. அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட்,‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த நிலையில், ‘டான்’ வரும் மார்ச் மாதம் 25 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மீண்டும் ஒலிக்கும் திருக்குறள்

படம்
தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் திருக்குறள் ஒலிக்கும் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் 10 திருக்குறள்கள் அவற்றின் பொருளுடன் ஒலிக்கின்றன. திருக்குறளை ஒலிக்கும் நடைமுறை 1995ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வோர் உள்ளிட்டோர் திருக்குறளை தெரிந்துகொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

உருவக்கேலிக்கு ஆளான கர்நாடக விவசாயியிடம் மன்னிப்பு கோரி, காரை டெலிவரி செய்தது மஹேந்திரா!  

படம்
கர்நாடக மாநிலத்தில் கார் வாங்கும் ஆர்வத்துடன் ஷோ ரூமுக்கு சென்ற விவசாயி ஒருவரை அங்கு பணியிலிருந்து விற்பனை பிரதிநிதிகள் அவரை பார்த்து உருவக் கேலி செய்துள்ளனர். இந்த செய்தி தேசிய அளவில் பரவியது. இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கார் நிறுவனமான மஹேந்திரா நிறுவனம் இதற்கு அவரிடம் கடிதம் மூலம் வருத்தத்தை தெரிவித்துள்ளது. அதோடு அவருக்கு பொலேரோ காரையும் டெலிவரி செய்துள்ளது.  தும்கூர் மாவட்டத்தில் உள்ள ராமன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கெம்ப கவுடா. விவசாயியான இவர் கார் வாங்கும் நோக்கத்தில் அங்குள்ள மஹேந்திரா கார் விற்பனை ஷோ ரூமுக்கு சென்றுள்ளார். அவர் தனக்கு பிடித்தமான காரின் விலையையும் கேட்டுள்ளார். ஆனால் அந்த ஷோ ரூமிலிருந்து பிரதிநிதிகள், ‘இந்த கார் விலை 10 லட்சம் ரூபாய்; உன் பாக்கெட்டில் 10 ரூபாய் இருக்குமா?’ என ஏளனமாக பேசி அவரை கேலி செய்துள்ளனர்.  உடனடியாக அவர் அந்த காருக்கான தொகையை வெறும் 30 நிமிடத்தில் திரட்டிக் கொண்டு சென்று காரை டெலிவரி செய்யுங்கள் என சொல்லியுள்ளார். ஆனால் அவருக்கு உடனடியாக டெலிவரி செய்யப்படவில்லை. பணம் செலுத்தினால் டெலிவரி செய்ய சில தினங்கள் ஆகும் என தெர

‘புஷ்பா’ படத்தின் ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு தனது பாட்டியுடன் நடனமாடி தெறிக்கவிட்ட பாண்ட்யா

படம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்பட பாடலுக்கு தனது பாட்டியுடன் சேர்ந்து நடன அசைவுகளை செய்திருந்தார். அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். நான்கு நாட்களுக்கு முன்னர் ஷேர் செய்யப்பட்ட இந்த வீடியோவுக்கு 49 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்திருந்தனர்.  View this post on Instagram A post shared by Hardik Himanshu Pandya (@hardikpandya93)   ‘ஸ்ரீ வள்ளி’ பாடலுக்கு ஹர்திக் பாண்ட்யா நடனமாடி இருந்தார். அந்த பாடலில் வருவது போலவே டேன்ஸ் ஸ்டெப்களை அவர் போட்டிருந்தார்.  இந்த நிலையில் அந்த வீடியோவை பார்த்த நடிகர் அல்லு அர்ஜுன், “மிகவும் அழகாக உள்ளது. இதற்கு என் அன்பும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். மனதைக் கவரும் வகையில் இந்த வீடியோ உள்ளது” என தெரிவித்துள்ளார். இந்த படம் இந்திய அளவில் ஹிட் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu New

”காட்சிகள் எல்லாமே நிஜம்” : கவனம் ஈர்க்கும் சமுத்திரக்கனியின் ‘பப்ளிக்’ ஸ்னீக் பீக்

படம்
சமுத்திரக்கனி மற்றும் காளி வெங்கட் நடித்துள்ள ‘பப்ளிக்’ ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. சமுத்திரக்கனி - காளி வெங்கட் இணைந்து நடித்துள்ள ‘பப்ளிக்’ படத்தினை அறிமுக இயக்குநர் ரா.பரமன் இயக்கியுள்ளார். இமான் இசையமைத்துள்ள, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சினிமா ரசிகர்களை மட்டுமல்லாமல் அறிவுஜீவிகளையும் உற்றுநோக்க வைத்தது. படத்தின் நாயகர்களுக்குப் பதிலாக மக்களுக்காக உழைத்த சிங்காரவேலர், பாரதிதாசன், கக்கன், அயோத்திதாச பண்டிதர், ஜீவானந்தம், நெடுஞ்செழியன், இரட்டைமலை சீனிவாசன்,காயிதே மில்லத், அன்னி பெசண்ட் உள்ளிட்ட நிஜ நாயகர்களை போஸ்டரில் இடம்பெறச் செய்து முதல் படத்திலேயே ‘தெறம’ன் என்று சொல்ல வைத்துவிட்டார் இயக்குநர் ரா.பரமன். கே.கே.ஆர் சினிமாஸ் தயாரித்துள்ள 'பப்ளிக்’ ஸ்னீக் பீக் தற்போது வெளியாகியுள்ளது. ஆரம்பத்திலேயே, ”இந்தப் படத்துல வர்றக் காட்சிகள் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையா எடுக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தணும்ங்கிற நோக்கம் இல்லை” என்று ஒலிக்கும் காளி வெங்கட்டின் குரல், அவர் பேசுவதை மறுத்து “இருங்க... இருங்கண்ணே. ஏன் அவசரம்? இந்தப் படத்துல வர்ற காட்ச

’வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திற்கு ரியாலிட்டி ஷோ மூலம் நாயகர்களை தேர்வு செய்யும் சுசி கணேசன்

படம்
’வஞ்சம் தீர்த்தாயடா' திரைப்படத்திற்கு ரியாலிட்டி ஷோ மூலம் நாயகர்களை தேர்வு செய்யவிருப்பதாக இயக்குனர் சுசி கணேசன் கூறியுள்ளார். இந்தியில் ‘தி ஹே ஹிரே’ படத்தை இயக்கி முடித்துள்ள சுசி கணேசன் , தமிழில் அடுத்ததாக ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தினை இயக்குவதாக அறிவித்திருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் சுசி கணேசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய சுசிகணேசன், ”‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்க இருக்கிறேன். அதற்கு நடிப்பில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் 20 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் தங்களுடைய வீடியோக்களை V4MaxTV.com என்ற இணையதளத்தில் பதிவிடவேண்டும். நடிப்பு ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படத்தில் உள்ள காட்சிகளை இரண்டு நிமிடத்தில் படமாக்கி அதை பதிவேற்றம் செய்யவேண்டும். அதில், சிறப்பாக நடித்தவர்களை தேர்வு செய்து ’வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தில் நாயகர்களாக நடிக்க வைக்க இருக்கிறேன். சினிமாவில் ஹீரோக்களுக்கு பஞ்சம் உள்ளது. தற்போது சினிமாவில் ஒரே

”புஷ்பான்னா ஃபளவர்னு நினைச்சீங்களா? ஃபயரு”: மகளுடன் இன்ஸ்டாவை தெறிக்கவிடும் டேவிட் வார்னர்

படம்
தனது மகளுடன் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ‘புஷ்பா’ படத்தின் டயலாக்கை டப்ஸ்மாஷ் செய்து வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுடன் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ உலகம் முழுக்க 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. குறிப்பாக, ‘புஷ்பா’ மூலம் பாலிவுட்டில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரசிகர்கள் அதிகரித்துள்ளார்கள். இதனாலேயே, ‘அலா வைகுந்தபுரம்லோ’ படத்தினை இந்தியில் டப்பிங் செய்து சமீபத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ‘புஷ்பா’ பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இன்ஸ்டா ரீல்ஸிலும் டப்ஸ்மாஷ் செய்தும் வீடியோக்கள் செய்து வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில், ஹர்திக் பாண்டியா ‘ஸ்ரீவள்ளி’ பாடலுக்கு தனது பாட்டியுடன் நடனமாடியிருந்தது செம்ம வைர

’நாச்சி’ ஆக கவனம் ஈர்க்கும் சிம்ரன்: ‘மகான்’ கேரக்டர் போஸ்டர் வெளியீடு

படம்
விக்ரமின் ‘மகான்’ படத்தின் சிம்ரன் கதாபாத்திரப் போஸ்டர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் 'மகான்' படத்தில் இணைந்து நடித்து முடித்துள்ளனர். சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘மகான்’ வரும் பிப்ரவரி 10 ஆம் வெளியாகவுள்ள நிலையில், கதாபாத்திரங்களின் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. நேற்று பாபி சிம்ஹாவின் போஸ்டர் வெளியான நிலையில், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் சிம்ரன் கதாபாத்திரப் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. நாச்சியாக நடிக்கும் சிம்ரன் வித்தியாசமான தோற்றத்தில் கவனம் ஈர்க்கிறார். ‘பிதாமகன்’ படத்திற்குப் பிறகு விக்ரமும் சிம்ரனும் இணைந்து நடிக்கிறார்கள். விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் சிம்ரன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முனீஸ்காந்த் ஞானமாகவும், சனந்த் ராக்கியாகவும் நடிக்கிறார்கள். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Onl

'அம்மா.. அடுத்த பிறவியிலும்..!' - தாயின் பிறந்த நாளுக்கு சிரஞ்சீவியின் உருக்கமான வாழ்த்து

படம்
தனது தாயின் பிறந்த நாளுக்கு நடிகர் சிரஞ்சீவி தெரிவித்த வாழ்த்து, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சிரஞ்சீவி தன்னை தனிமைபடுத்திக்கொண்டுள்ளார். இந்நிலையில் தனது தாயின் பிறந்த நாளையொட்டி, அழகான வாழ்த்தையும், புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 'குவாரன்டையினில் இருப்பதால் உங்களை மிஸ் செய்கிறேன் அம்மா' என உருக்குமாக பதிவிட்டுள்ளார். மேலும், தனது மனைவி மற்றும் தாயுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, ''பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா!. நான் குவாரன்டைனில் இருப்பதால் உங்களிடம் நேரடியாக என்னால் ஆசீர்வாதம் வாங்க முடியவில்லை. அதனால் என்னுடைய வாழ்த்துகளை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். எனது இந்த பிறவியில் மட்டுமல்லாமல், அடுத்த பிறவியிலும் உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என நான் இறைவனிடம் கேட்டுக்கொள்கிறேன். அன்புடன் உங்கள் சங்கர் பாபு'' என பதிவிட்டுள்ளார். ஒவ்வொரு வருடமும், பவன் கல்யாண், நாக பாபு உள்ளிட்ட ஒட்டுமொத்த குடும்பமும் சிரஞ்சீவி அம்மாவின் பிறந்

பிப்ரவரி 7-ல் துவங்கும் சிம்புவின் ’வெந்து தணிந்தது காடு’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

படம்
சிம்பு - கெளதம் மேனனின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி துவங்கவுள்ளது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமாக உருவாகும் இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியான நிலையில் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி மும்பையில் துவங்குகிறது. ஏற்கனவே, இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் 15 நாட்கள் நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளையொட்டி முதல் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

என்னை ஆன்டி இந்து என்கிறார்கள்- ‘ஷ்யாம் சிங்கா ராய்’ இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் பேட்டி

படம்
”‘ஷ்யாம் சிங்கா ராய்’ தெலுங்கில் கமர்ஷியல் ஹிட் அடிக்கும் என்பது தெரியும். ஆனால், தமிழகத்தில் இந்தளவுக்கு படத்தை கொண்டாடுவாங்கன்னு நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல. தமிழ் மக்கள் பாராட்டுறது எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாவும் பிரமிப்பாவும் இருக்கு. தியேட்டர்ல ரிலீஸானதைவிட ஓடிடியில் வெளியான பிறகு படத்தை இன்னும் அதிகம் பேர் பாராட்டுகிறார்கள்” என்று உற்சாகப் பூரிப்புடன் பேசுகிறார், ’ஷ்யாம் சிங்கா ராய்’ படத்தின் இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன். ஒரு தெலுங்கு சினிமாவுக்கு, இந்தளவுக்கு நெகிழ்ச்சியான பாராட்டுகளை தமிழக மக்கள் வாரி வழங்கியதில்லை. சமூக வலைதளங்கள் மூலம் பார்வையாளர்கள் தினந்தினம் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இந்த நிலையில், சமூக ஒடுக்குமுறைகளை காட்டிய நிஜ ஷ்யாம் சிங்கா ராயான இயக்குநர் ராகுல் சங்க்ரித்யனைத் தொடர்புகொண்டு பேசினோம். புதிய தலைமுறை டிஜிட்டலுக்காக பிரத்யேகமாகப் பேசினார். ’ஷ்யாம் சிங்கா ராய்’ கதை ஆந்திராவிலோ தென்னிந்திய மாநிலங்களிலோ நடைபெறுவதுபோல் காட்டியிருக்கலாமே? ஏன் மறு ஜென்மம், கொல்கத்தா பின்னணி என்றெல்லாம் சுற்றி வளைத்துள்ளீர்கள்? ”இப்படத்தை முதலில் மறுஜென்மக் காதல் கதையாக எடு

நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கில் அபராதம் நிறுத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

படம்
நடிகர் விஜய் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்த பி.எம்.டபிள்யூ சொகுசு காருக்கு, எந்த அடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து ரூ. 63 லட்சம் மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 என்ற சொகுசுக் காரை இறக்குமதி செய்திருந்தார். முறையாக சுங்கவரி செலுத்தி இந்தக் காரை இறக்குமதி செய்த நிலையில், இந்தக் கார் தமிழகத்திற்குள் நுழைவதற்கான நுழைவு வரியை செலுத்த உத்தரவிடப்பட்டது.  இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நுழைவு வரியை வசூலிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என உத்தரவிட்டது. அதன்படி நடிகர் விஜய், பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 சொகுசுக் காருக்கு  ரூ. 7.98 லட்சம் நுழைவு வரி செலுத்தியிருந்தார். எனினும், நுழைவுவரி செலுத்தாமல் தாமதமான காலத்திற்காக, 400 சதவீதம் அபராதம் விதித்து, அதாவது ரூ. 30 லட்சத்து 23 ஆயிரம் வணிகவரித்துறை அபராதம் விதித்தது. இந்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக

சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான செய்தி - நாகார்ஜுனா காட்டம்

படம்
சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து குறித்து வெளியான வதந்திக்கு நடிகர் நாகார்ஜுனா காட்டமாக தனது ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவும், தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவும் காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார். இதற்கிடையில் சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இருவரும், திடீரென ‘இனி நாங்கள் கணவன்- மனைவி அல்ல. பிரிகிறோம்’ என்று கடந்த ஆண்டு அக்டோபரில் தனித்தனியாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர். இந்தச் செய்தி தென்னிந்திய திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவர்களது பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், எதனால் இவர்கள் பிரிந்தனர் என இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர், அவரவர்களுக்கு தெரிந்த, தகவல்களைக் கூறி வந்தனர். மேலும், சமீபத்தில் நாகசைதன்யா அளித்த பேட்டி ஒன்றில், தி

`கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் தேர்வுகள் ஆன்லைனில்தான் நடக்கும்’- அமைச்சர் பொன்முடி பேட்டி

படம்
பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில், தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறுமா அல்லது நேரடியாக நடைபெறுமா என மாணவர்களிடையே கேள்வி எழுந்திருந்தது. இது தொடர்பாக, உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை புதிய தலைமுறை சார்பாக தொடர்புக்கொண்டு பேசினோம். அப்போது, ஏற்கெனவே அறிவித்தபடி ஆன்லைன் வழியே தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பின்போது உயர்க் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “செய்முறைத் தேர்வுகள் இருக்கும் என்பதால்தான் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. ஆன்லைன் தேர்வு இல்லாத நாட்களில் மாணவர்கள் கல்லூரிகளுக்கு வர வேண்டும். கல்லூரிகள் பிப்.1ல் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் முறையிலேயே 1, 3, 5ஆவது செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். எனவே யாரும் குழப்பமடைய வேண்டாம்” எனத் தெரிவித்தார். நேற்று முன்தினம் நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநரின் மும்மொழிக் கல்வி கொள்கை குறித்து தனது கருத்துகளை பகிர்ந்த அவர், “தமிழகத்தில் கண்டிப்பாக இருமொழிக் கொள்கைதான் தொடரும். அதில் தமிழக அரசும், முதல்வரும் உறுதியாக இருக்கின்றனர். முதல்வர் சொன்னதுபோல, எங்களுக்கு விருப்ப

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆன்லைன் வழியிலேயே கல்லூரி தேர்வுகள் - உயர் கல்வித்துறை தகவல்

படம்
பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஆன்லைன் வழியிலேயே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதிமுதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் தேர்வுகள் எவ்வாறு நடைபெறும் என குழப்பம் நிலவியது. கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தபடி செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் வழியிலேயே நடைபெறும் என தகவல் வெளியாகியிருக்கிறது. கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி படிப்புகளுக்கு ஆன்லைன் வழியிலேயே தேர்வு நடத்தப்படும் என உயர்க்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

‘100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன்’ - சமந்தா பகிர்ந்த பனிச்சறுக்கு அனுபவம்

படம்
இன்ஸ்டாகிராமில், நடிகை சமந்தா தனது பனிச்சறுக்கு பயிற்சியாளருடன் இருக்கும் படத்தை பகிர்ந்து கொண்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள சமந்தா, “நான் சிறு குழந்தைகளுடன் என் பனிச்சறுக்கு பயணத்தை பன்னி ஸ்லோப்பில் தொடங்கினேன். 100 முறை விழுந்து ஒவ்வொரு முறையும் எழுந்தேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது அனுபவத்தை உற்சாகமாகவும் அச்சுறுத்தலாகவும் மாற்றியதற்கு நன்றி. என்னைப் பயிற்றுவித்ததற்காக அன்பான கேத்க்கு ஒரு பெரிய கூக்குரல்” தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/CZOlEkqriXY/?utm_source=ig_web_copy_link சமந்தா தற்போது சுவிட்சர்லாந்திற்கு பயணம் சென்றுள்ளதோடு, தனது பயணத்தின் போது பனிச்சறுக்கு விளையாட்டையும் விளையாடிவருகிறார். மேலும், பனிச்சறுக்கு பயிற்சியின் போது கீழே விழும் வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார் Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News