’வஞ்சம் தீர்த்தாயடா’ படத்திற்கு ரியாலிட்டி ஷோ மூலம் நாயகர்களை தேர்வு செய்யும் சுசி கணேசன்

’வஞ்சம் தீர்த்தாயடா' திரைப்படத்திற்கு ரியாலிட்டி ஷோ மூலம் நாயகர்களை தேர்வு செய்யவிருப்பதாக இயக்குனர் சுசி கணேசன் கூறியுள்ளார்.

இந்தியில் ‘தி ஹே ஹிரே’ படத்தை இயக்கி முடித்துள்ள சுசி கணேசன் , தமிழில் அடுத்ததாக ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தினை இயக்குவதாக அறிவித்திருக்கிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் இயக்குனர் சுசி கணேசன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய சுசிகணேசன், ”‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தில் புதுமுகங்களை நடிக்க வைக்க இருக்கிறேன். அதற்கு நடிப்பில் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் 20 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் தங்களுடைய வீடியோக்களை V4MaxTV.com என்ற இணையதளத்தில் பதிவிடவேண்டும். நடிப்பு ஆர்வம் உள்ளவர்கள் தங்களுக்கு பிடித்த திரைப்படத்தில் உள்ள காட்சிகளை இரண்டு நிமிடத்தில் படமாக்கி அதை பதிவேற்றம் செய்யவேண்டும். அதில், சிறப்பாக நடித்தவர்களை தேர்வு செய்து ’வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தில் நாயகர்களாக நடிக்க வைக்க இருக்கிறேன்.

image

சினிமாவில் ஹீரோக்களுக்கு பஞ்சம் உள்ளது. தற்போது சினிமாவில் ஒரே சூப்பர் ஸ்டார் தான். வருங்காலத்திலும் ஏராளமான சூப்பர் ஸ்டார்கள் வரவேண்டும். எனவேதான், புதுமுகங்களை தேடி நடிக்க வைக்கிறேன். மேலும், இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா உடன் பணியாற்றுவது எனக்குக் கிடைத்த பெருமை” என்று பெருமையுடன் கூறினார்.

அதனையடுத்து, அவர், ‘வஞ்சம் தீர்த்தாயடா’ படத்தை தொடர்ந்து வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால், ’அது திரைப்படமாகவோ அல்லது வெப் சீரிஸ் ஆகவோ உருவாக்கப்படலாம்’ எனவும் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்