குமரியில் தொடங்கிய சூர்யா - பாலா படத்தின் படப்பிடிப்பு: சூப்பர் ஹிட் நாயகி யார் தெரியுமா?

‘சூர்யா 41’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

சூர்யா - பாலா மூன்றாவது முறையாக ’சூர்யா 41’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின், அறிவிப்பு அதிகாரபூர்வமாக கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது. துருவ் விக்ரமின் ‘வர்மா’ படத்திற்குப் பிறகு பாலா இப்படத்தை இயக்குகிறார். ’வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் துவங்கவுள்ள நிலையில், பாலா-சூர்யா படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கன்னியாகுமரியில் துவங்கியுள்ளது. சூர்யா தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகியாக, ‘உப்பெனா’ புகழ் கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

image

image

கீர்த்தி ஷெட்டி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘உப்பெனா’ கொரோனா சூழலிலும் 100 கோடி வசூலைக் கடந்து சாதனைப் படைத்தது. அப்படத்தில், விஜய் சேதுபதி மகளாக நடித்து கவனம் ஈர்த்தார் கீர்த்தி ஷெட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘ஷ்யாம் சிங்கா ராய்’ படமும் சூப்பர் ஹிட் அடித்தது. தற்போது லிங்குசாமி இயக்கத்தில் கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள ‘வாரியர்’ வரும் ஜூலை 14 ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது. தற்போது, தமிழில் சூர்யா படத்தில் அறிமுகமாவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளனர்.

image

image

ஏற்கெனவே, பாலா இயக்கத்தில் ‘நந்தா’, ‘பிதாமகன்’ உள்ளிட்டப் படங்களில் சூர்யா நடித்துள்ளார். பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் ஹாட்ரிக் வெற்றி கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்