இடுகைகள்

மே, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் வழி கல்வியில் பள்ளிப் படிப்பு - 24 வயதில் யுபிஎஸ்சி தேர்வில் அசத்திய தஞ்சை மாணவி

படம்
மைக்கேல்பட்டியை சேர்ந்த ரெனிட்டா என்ற இளம்பெண், யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த மைக்கேல்பட்டி கிராமத்தில் வசித்து வரும் ரவி - விக்டோரியா தம்பதியினரின் மகள் ஏஞ்சலின் ரெனிட்டா. இவர், மைக்கேல்பட்டி திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படித்துள்ளார். 10-ம் வகுப்பில் 500-க்கு 490 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பில் 1200-க்கு 1158 மதிப்பெண்களும் பெற்று உள்ளார். தமிழ்வழி கல்வியில் பள்ளி படிப்பை முடித்த ரெனிட்டா, ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்கிற லட்சிய நோக்கில் பயணம் செய்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் நீர்பாசன பொறியியல் படித்த ரெனிட்டா தங்கப்பதக்கம் வென்றுள்ளார். சிறு வயதில் வேளாங்கண்ணிக்கு குடும்பத்தினருடன் சென்ற ரெனிட்டா சுனாமி பாதிப்பை நேரில் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து, அரசுப் பணியில் இருந்தால் உதவி செய்யலாம் என்ற எண்ணம் தான் ஐ.ஏ.எஸ் படிக்க வேண்டும் என்ற தூண்டுகோலாக இருந்தது என்று ரெனிட்டா கூறியுள்ளார். இந்நிலையில்,

ஹரியுடன் இணையும் ஜெயம் ரவி?

படம்
இயக்குநர் ஹரி - ஜெயம் ரவி இணைகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் ஹரி அருண் விஜய்யை வைத்து ‘யானை’ படத்தை இயக்கி முடித்துள்ளார். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து. வரும் ஜூன் 17 ஆம் தேதி ‘யானை’ வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இயக்குநர் ஹரி நடிகர் ஜெயம் ரவிக்கு கதை சொல்லியதாகவும் அடுத்ததாக ஜெயம் ரவி ஹரி இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் ’பொன்னியின் செல்வன்’, ‘அகிலன்’ வெளியாகவுள்ளது. அகமது இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்தப்பிறகு ஹரியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்த ‘அருவா’ எப்போதுவேண்டுமென்றாலும் தொடங்கப்படலாம் என்று ஹரி கூறியுள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | L

துபாயில் துஷாரா விஜயன்: ஸ்கை டைவிங் செய்து அசத்தல்

படம்
துபாயில் நடிகை துஷாரா விஜயன் ஸ்கை டைவிங் செய்த புகைப்படங்கள் வைரல் ஆகியுள்ளன. ’சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் தமிழக இளைஞர்களின் இதயங்களை வாரிக்கொண்டார் நடிகை துஷாரா விஜயன். ‘எனக்கு மாரியம்மா மாதிரி ஒரு மனைவி அமைய மாட்டாளா’ என்கிற அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடினார்கள். அந்தளவுக்கு யதார்த்தமான நடிப்பால் பாராட்டுக்களைக் குவித்தார் துஷாரா. தற்போது, பா ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’, வசந்தபாலனின் ‘அநீதி’ உள்ளிட்டப் படங்களில் நாயகியாக நடித்து வரும் துஷாரா விஜயன் துபாய் சென்றுள்ளார். அங்கு வானத்தில் சாகச விளையாட்டு எனப்படும் ஸ்கை டைவிங்கை பயமில்லாமல் விமானத்தில் இருந்து குதித்து தனது உடம்பில் மாரியம்மாவே புகுந்த மாதிரி வானத்தில் பறந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, ”வானத்திலிருந்து பூமியைப் பார்ப்பது சொர்கத்தைப் பார்ப்பது போன்ற ஒரு உலக அனுபவம். உடல், மனம், மற்றும் ஆன்மாவிற்கு ஒரு முழுமையான புத்துணர்ச்சி கிடைத்தது. இவ்வளவு அழகான வழிகாட்டியாக இருந்ததற்காக எனது பயிற்றுனர்கள் குழுவிற்கு நன்றி. ஒவ்வொரு நொடியும் சொர்க்கத்தின் தருணங்களை உணர்ந்தேன், தரையிறங்கும்போது முழுமையான அமைதியை

வயது உயர்த்தப்பட்டதற்கு பின் நடக்கும் முதல் பணி ஓய்வு: ஒரேநாளில் 5,300 பேருக்கு ஓய்வு

படம்
ஓய்வு பெறக்கூடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வயது 60 ஆக உயர்த்தப்பட்ட பின்பு இன்று முதன் முறையாக அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றுள்ளனர். இதில் இன்று ஒரே நாளில் சுமார் 5,300 பேர் ஓய்வு பெறுகின்றனர். தமிழகத்தில் 9 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் ஒய்வு பெறும் வயது, கடந்த 2020-ம் ஆண்டு 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் கடந்த இரண்டு வருடங்களாக ஓய்வு பெறாமல் இருந்த நிலையில், இன்று அவர்கள் அனைவரும் மொத்தமாக ஓய்வு பெறுகிறார்கள். கடந்த காலங்களில் பெரும்பாலும் அரசு ஊழியர்கள் பணியில் சேரும் காலம் மே, ஜூன் என்றே இருக்கும் என்பதாலும் ஆசிரியர்களைப் பொறுத்தவரை கல்வி ஆண்டின் இறுதியில் தான் ஓய்வு பெறுவார்கள் என்பதாலும் இதுபோல ஒரேநேரத்தில் ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதையும் படிங்க... “ஆணாக பிறந்திருக்கலாம்”-மாதவிடாய் வலியால் பிரெஞ்ச் ஓபனை தவறவிட்ட சீன வீராங்கனை வேதனை முன்னதாக ஓய்வு பெறும் வயது 62 வயதாக உயர்த்தப்படலாம் என்ற தகவல்கள் பரவி வந்த நிலையில் இன்று இத்தனை பேருக்கு பணி ஓய்வு கிடைத்திருப்பதன் மூலம் அத

திரையரங்குகளில் 50-வது நாளை நெருங்கும் யஷின் ‘கேஜிஎஃப் 2’ - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

படம்
நடிகர் யஷின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பு பெற்ற ‘கே.ஜி.எஃப்2 ’ திரைப்படம், பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஹோம்பாலே தயாரிப்பில், நடிகர் யஷின் நடிப்பில் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட படம் ‘கே.ஜி.எஃப்.2’. இவர்களின் கூட்டணியில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘கே.ஜி.எஃப் 1’ மிகப்பெரிய வரவேற்பை பெற்றதையடுத்து, ‘‘கே.ஜி.எஃப்.2’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. கொரோனா காரணமாக பட வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டநிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக, கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், படக்குழுவின் எதிர்பார்ப்புகளையும் மீறி வெற்றி நடைபோட்டு வருகிறது. படம் வெளியாகி 47 நாட்கள் ஆகியும் திரையரங்குகளில் வரவேற்பு குறையாதநிலையில், இதுவரை 1238 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது ‘கே.ஜி.எஃப்.2’ படம். இந்நிலையில், ‘கே.ஜி.எஃப்.2’ படம், பிரபல ஓடிடி தளமான அமேசான் பிரைமில் வருகிற ஜூன் 3-ம்

கல்விக் கொள்கை: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் பொன்முடி மறைமுக பதில்

படம்
புதிய கல்விக் கொள்கையை முழுமையாக படித்த பின்னரே அதுகுறித்து தாங்கள் பேசிவருவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் நடைபெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி,  “ மாநில அரசின் கருத்துக்கு ஆளுநர் உரிய முக்கியத்துவம் அளிப்பார் என நம்புகிறோம்” என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி. மேலும் அவர் பேசுகையில் “ புதிய கல்விக்கொள்கையில் 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பொதுத்தேர்வு கொண்டு வந்தால் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாகிவிடும். இங்கு சிலர் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் சரியாகப் படிக்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் புதிய கல்விக் கொ

நானி - நஸ்ரியாவின் ‘அடடே சுந்தரா’: ட்ரெய்லர் அப்டேட்டை கொடுத்த படக்குழு

படம்
நானி - நஸ்ரியாவின் ‘அடடே சுந்தரா’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்டை கொடுத்திருக்கிறது படக்குழு. ‘ஷ்யாம் சிங்கா ராய்’ வெற்றிக்குப் பிறகு நானி ‘தசரா’, ‘அடடே சுந்தரா’ உள்ளிட்டப் படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இதில், ‘அடடே சுந்தரா’வில் திருமணத்திற்குப்பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் நடிகை நஸ்ரியா. கடந்த 2014-ஆம் ஆண்டு ஃபகத் ஃபாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் படங்களில் நடிக்காமல் ’வரதன்’, ’கும்ப்ளங்கி நைட்ஸ்’ உள்ளிட்டப் படங்களை மட்டுமே தயாரிக்க செய்தார். கடைசியாக ஃபகத் ஃபாசிலுடன் ’ட்ரான்ஸ்’ படத்தில் மட்டுமே தலைகாட்டியிருந்தார். இந்நிலையில், நஸ்ரியா முதன்முறையாக தெலுங்கு படத்தில் நானிக்கு ஜோடியாக ’அடடே சுந்தரா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் திரைப்படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் `அண்டி சுந்தரானிகி’ என்ற பெயரிலும் தமிழில் ‘அடடே சுந்தரா’ என்ற பெயரிலும் வெளியாகவுள்ளது. நஸ்ரியாவின் ரீ என்ட்ரி படம் என்பதால் தியேட்டர்களில் மாஸ் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். ஏகப

ஓடிடியில் வெளியாகும் ‘டான்’ - ரிலீஸ் தேதி அறிவிப்பு

படம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ’டான்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா அருள்மோகன், சிவாங்கி, பாலசரவணன் உள்ளிட்டோர் நடித்த ’டான்’ திரைப்படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. சூப்பர்/ சுமார் என்று கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ‘டாக்டர்’ படம் போலவே வசூலில் ‘டான்’ என்பதை நிரூபித்துள்ளார் சிவகார்த்திகேயன். அப்பா-மகன் செண்டிமெண்ட் ஒர்க்கவுட் ஆகியுள்ளது என்பதற்கு இப்போதும் டானுக்கு படையெடுக்கும் மக்களே சாட்சி. ‘டாக்டர்’ போலவே ’டான்’ படமும் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது என்று சமீபத்தில் படக்குழு அறிவித்தது. தமிழகத்தில் சுமார் 500-க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் நாள் தமிழகத்தில் 8 கோடியே 60 லட்ச ரூபாய் வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து இரண்டாம் நாளில் 10 கோடியே 30 லட்சம் ரூபாயும், மூன்றாம் நாளில் 11 கோடியே 18 லட்சம் ரூபாயும் வசூல் செய்தது. படம் வெளியாகி 12 நாட்களில் ரூ.100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்திருந்தது. ’டான்’ ப

"Titanic Rise ஆகி பார்த்ததில்லையே?"- கலையரசனின் 'டைட்டானிக்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

படம்
கலையரசன் நடித்துள்ள ‘டைட்டானிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. நடிகர் கலையரசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘குதிரைவால்’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அடுத்ததாக, ‘டைட்டானிக்’, இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள ’நட்சத்திரம் நகர்கிறது’ உள்ளிட்டப் படங்கள் கலையரசன் நடிப்பில் வெளியீட்டிற்குத் தயாராய் உள்ளன. இதில், சில வருடங்களாக தயாரிப்பில் உள்ள ‘டைட்டானிக்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தினை ஜானகிராமன் இயக்க சி.வி குமார் தயாரித்துள்ளார். ‘கயல்’ ஆனந்தி, காளி வெங்கட், காயத்ரி, மதுமிதா, ஆஷ்னா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். மூன்று காதல்களை மையப்படுத்திய இக்கதை சென்னை, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுல்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜானகிராமன் இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு. ’டைட்டானிக்’ வரும் ஜூன் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவித்துள்ள

ரிலீசுக்கு முன்பே 200 கோடி ரூபாய் வியாபாரம்? - மாஸ் சம்பவத்திற்கு தயாராகும் ‘விக்ரம்’ படம்

படம்
பட வெளியீட்டுக்கு முன்பாகவே 200 கோடி ரூபாய்-க்கும் மேல் ‘விக்ரம்’ படம் வியாபாரம் புரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, சூர்யா, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா ஆகிய மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ப்ஸ் காட்சிகள், ‘பத்தல பத்தல’ பாடல் முதல் சிங்கிள் ஆகியவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. கமலின் நடிப்பில் 4 ஆண்டுகளுக்குப் பின் வெளியாகவுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் படம் வெளியாவதற்கு இன்னும் ஒருசில தினங்களே உள்ளதால், எங்கு காணினும் ‘விக்ரம்’ படத்தின் புரமோஷன்களே கண்களில் தென்படுகின்றன. நேற்று முதல் படத்திற்கான முன்பதிவும் துவங்கியுள்ளது. இந்நிலையில், பட வெளியீட்டுக்கு முன்பாகவே 200 கோடி ரூபாய்-க்கும் மேல

லிங்குசாமியின் ‘தி வாரியர்’: படக்குழு வெளியிட்ட சூப்பர் அப்டேட்

படம்
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ’தி வாரியர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் லிங்குசாமி.  கீர்த்தி ஷெட்டி நாயகியாகவும் ஆதி வில்லனாகவும் மற்றும் நதியா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். பிருந்தா சாரதி வசனங்கள் எழுத தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 14-ஆம் தேதி வாரியர் திரைப்படம் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ‘புல்லட்’ முதல் பாடம் வெளியாகி இன்ஸ்டா ரீல்ஸில் வைரல் ஹிட் அடித்துள்ளது. ராம் பொத்தினேனி போலீஸாக நடிக்கும் முதல் படம் இது. சமீபத்தில் வெளியான டீசரில் அவரின் போலீஸ் கெட்டப் ஆக்‌ஷன் காட்சிகளும் பிருந்தா சாரதியின் வசனங்களும் படத்திற்கு பிரம்மாண்டத்தைக் கொடுத்திருக்கின்றன. உடல் மொழியாலேயே மிரட்டியிருந்தார் நடிகர் ஆதி. இந்த நிலையில்’தி வாரியர்’ படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனை உற்சாகமுடன் படக்குழு புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளது. Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Ta

நல்லதே நடக்கும்

படம்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. Source : www.hindutamil.in from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்டா மாவட்ட தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

படம்
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இன்று மதியம் 12.30 மணியளவில் திருச்சி வந்தடையும் முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை சென்று தூர்வாரும் பணிகள் மற்றும் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார். நாளை நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மற்றும் திருவாரூரில் ஆய்வு மேற்கொள்கிறார். டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது விவசாயிகளை சந்தித்து முதலமைச்சர் கருத்துகளை கேட்க உள்ளார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

இந்தநாள் உங்களுக்கு எப்படி? 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

’‘எடுக்கற சார்...அவதாரம் எடுக்குற’’ - வெளியானது ’தி லெஜண்ட்’ திரைப்பட ட்ரெய்லர்

படம்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் கதாநாயகனாக உருவெடுத்துள்ள ‘ தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. ’தி லெஜண்ட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா இன்று மாலை 6 மணிக்கு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ராய் லட்சுமி, ஷ்ரதா ஸ்ரீநாத், யாஷிகா ஆனந்த், டிம்பிள் ஹயாதி, ஸ்ரீ லீலா, நுபுர் சனான், ஊர்வசி ரௌதாலா ஆகியோர் கலந்துகொண்டனர். பிரம்மாண்டமாக  உலகமே ஆச்சர்யப்படுகிற பெரிய சைன்டிஸ்ட் நீங்க... என்று தொடங்குகிறது ட்ரெய்லர். இதன்மூலம் ’தி லெஜண்ட்’ விஞ்ஞானி கதாநாயகனாக இந்த படத்தில் நடித்துள்ளார் என்று தெரிகிறது. ஒரு பெரிய விஞ்ஞானி சிறிய கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மக்களுக்கு தன்னுடைய படிப்பும் அறிவும் பயன்படவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் எல்லாப் படங்களிலும் ஹீரோக்களுக்கு எதிரிகள் இருப்பதைப்போல் இந்த படத்திலும் விஞ்ஞானி சரவணனுக்கும் எதிரிகள் இருக்கின்றனர். அவர்கள் சரவணனை எமோஷனல் தாக்குதலுக்கு ஆளாக்க அவரால் இந்திய விஞ்ஞானிகளுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இது ட்ரெய்லரின் முதல் பாதி. இ

நாமக்கல்: விபத்தில் உயிரிழந்த ரசிகர் - நேரில் சென்று ஆறுதல் கூறி நடிகர் சூர்யா அஞ்சலி

படம்
விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் கூறி ரசிகரின் உருவ படத்திற்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். நாமக்கல் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (25). இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி நாமக்கல் துறையூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் காவல் நிலையம் அருகே சாலையின் வளைவில் திரும்பும்போது லாரி ஒன்று இவர் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜெகதீஷ் ஆன்புலன்ஸ் மூலம் சேலத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த ஜெகதீஷ், நடிகர் சூர்யாவின் தீவிர ரசிகராக இருந்து வருவதோடு, 15 வருடமாக மன்ற பணியாற்றி வந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த ரசிகரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக, நாமக்கல் மேட்டுத் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று வந்த நடிகர் சூர்யா, உயிரிழந்த ஜெகதீஷின் மனைவி ராதிகா மற்றும் அவரது உறவினர்களுக்கு கண் கலங்கியவாறு ஆறுதல் தெரிவித்

‘ஹாரர் திரைப்படங்களில் நடிக்க தயங்கினேன்’ - ‘13’ பட செய்தியாளர் சந்திப்பில் ஜி.வி.பிரகாஷ்

படம்
ஹாரர் திரைப்படங்களில் நடிக்க தயங்கியதாக இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள ‘13’ என்ற திரைப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், இயக்குநர் விவேக், தயாரிப்பாளர் நந்தகோபால் மற்றும் திரைப்படத்தின் நாயகிகள் கலந்து கொண்டனர். ‘13’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ஹாரர் கிரைம் திரில்லர் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர். அதேபோல் நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் பேசும் பொழுது, தன்னுடைய முதல் படமான ‘டார்லிங்’ ஹாரர் வகையில் எடுக்கப்பட்டிருந்தது. அதற்குப்பிறகு ஹாரர் திரைப்படங்களை நடிப்பதை தவிர்த்து விட்டேன். தற்போதைய சூழலில் வாரம் ஒரு ஹாரர் திரைப்படம் வெளியாகிறது. அவை அனைத்தும் கிளிஷேவ் வகையில் உள்ளன. எனவே தயாரிப்பாளர் கதை கேட்க வலியுறுத்தியபோது, ஹாரர் திரைப்படங்களில் நடிப்பதில்லை, குறிப்பாக ஹாரர் காமெடி திரைப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறினேன் என தெரிவித்தார். ஆனால் இந்தக் கதையை கேட்டப் பிறகு உடனடியாக

வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?

படம்
என்பதுகளில் பிறந்தவர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த நடிகை குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம், அவரது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியையும், சிலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 80-களில் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி வைத்திருந்த நடிகை குஷ்பு, நதியா ஆகியோர் பல ஆண்டுகளுக்கு பின்னரும் அதே இளமை தோற்றத்துடனே இருந்து வந்தனர். கொரோனாவுக்கு பிறகு உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கிய நடிகை குஷ்பு, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். உடல் மெலிந்த அவரது புகைப்படங்களை கண்டு அவருக்கு உடல்நல பாதிப்பா? என பலர் விமர்சித்து வந்தனர். இந்நிலையில், 20 கிலோ எடையை குறைத்ததாகவும், தமது உடல்நலம் குறித்து விசாரித்தவர்களுக்கு நன்றி எனவும் கூறி கடந்த ஆண்டு இறுதியில் விமர்சனங்களுக்கு பதில் அளித்து இருந்தார். இந்நிலையில், தமது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் மீண்டும் பேசு பொருளாகியுள்ளது. சிலர் குஷ்பூவின் புதிய கெட்டப்-க்கு ஆதரவு தெரிவிக்க, பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். உருவக் கேலிக்கு உள்ளான பிரபலங்கள் குறித்த தொகுப்பை பார்க்கலாம்... இப்போதெல்ல

பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!

படம்
திரையுலகில் நடிகர்கள், நடிகைகள், கிரிக்கெட்டில் ஐபிஎல் அணிகள் மற்றும் ஐபிஎல் வீரர்கள் ஆகியோர் பான் இந்தியா அளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளவர்கள் யார், யார் என்று ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக இந்திய திரையுலகில் பான் இந்தியா என்ற வார்த்தை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக பாகுபலி, புஷ்பா, ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப். ஆகிய தென்னிந்தியப் படங்கள், வட இந்தியாவில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவதால், இந்தியப் படங்கள் என்பதைத் தாண்டி, பான் இந்தியா படங்கள் என்ற வார்த்தை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பான் இந்தியா என்ற அங்கீகாரத்தால் தென்னிந்திய நடிகர், நடிகைகள், இயக்குநரர்கள் வட இந்தியாவில் பெருமளவில் ரசிகர்களிடையே புகழடைந்து வருகின்றனர். இந்நிலையில், ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் எடுத்த சர்வேயில் இந்திய அளவில் ஆதிக்கம் செலுத்தும் நடிகர்கள், நடிகைகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பஞ்சாபி, பெங்காலி ஆகிய மொழிகளைச் சேர்ந்த மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட சர்வேயில்

சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ’தோனி பயோபிக்’ பட நடிகை?

படம்
சிவகார்த்திகேயனின் அடுத்தப் படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான கடைசி இரண்டுப் படங்களான ‘டாக்டர்’ மற்றும் ‘டான்’ ஆகிய இரண்டு படங்களும் சுமார் 100 கோடி ரூபாய்-க்கும் மேல் வசூலை குவித்துள்ளன. இதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் கே.வி. அனூதீப் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஸ்.கே.20’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்ற நிலையில், தற்போது பாடல் காட்சிகள் புதுச்சேரியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் மரியா ரியாபோஸப்கோ கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிக்கவுள்ள ‘எஸ்.கே.21’ புதியப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இந்நிலையில், யோகி பாபுவின் ‘மண்டேலா’ படத்தை இயக்கிய இயக்குநர் மடோன் அஸ்வினுடன், சிவகார்த்திகேயன் புதியப் படம் ஒன்றில் கூட்டணி அமைக்கவுள்ளதாக தவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்காக பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம்

பிரமாண்டமாக நடைபெறவுள்ள “தி லெஜண்ட்” படத்தின் டிரைலர் & இசை வெளியீட்டு விழா!

படம்
தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் முதன் முறையாக மிகுந்த பொருட்செலவில் மிக பிரமாண்டமான முறையில் பன்மொழி பான் இந்தியா படம் ஒன்றை தயாரித்து வருகின்றனர். “தி லெஜன்ட்” என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதாநாயகனாக லெஜண்ட் சரவணன் நடிக்கிறார். எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்த பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகவுள்ளது லெஜண்ட் சரவணன் நடிக்கும் “தி லெஜண்ட்”. ஜேடி-ஜெர்ரி ஆகியோர் படத்தின் கதை திரைக்கதையை எழுதி இயக்குகியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தின் முதல் லிரிக்கல் பாடல் “மொசலோ மொசலு -வை பிரபல இயக்குநர்கள் மணிரத்னம், ராஜமெளலி மற்றும் சுகுமார் வெளியிட்ட நிலையில், ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை கடந்து ஹிட் அடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாடலான “வாடி வாசல்” சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில் அதுவும் ஒரு கோடி பார்வைகளை கடந்து ரசிக்கப்பட்டு வருகிறது. “ஜனரஞ்சக கலைஞன்”, “சின்னக் கலைவாணர்” என அனைவராலும் பாராட்டப்பட்ட விவேக் கடைசியாக நடித்த படம் இதுவாகும். ஒரு அன்பான எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும்,