நம்பர் 1 சர்ச்சைக்கிடையே அஜித்தின் ‘துணிவு’ படத்தை வெளியிடும் ‘வாரிசு’ தயாரிப்பாளர்!

தமிழ் சினிமாவில் யார் நம்பர் 1 ஹீரோ என்ற சர்ச்சைக்கிடையே, அஜித்தின் ‘துணிவு’ படத்தை ஆந்திராவின் இரண்டு ஏரியாக்களில், விஜய்யின் ‘வாரிசு’ படத் தயாரிப்பாளர் தில் ராஜூ வெளியிட உள்ளார்.

‘வலிமை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ளப் படம் ‘துணிவு’. ஜிப்ரான் இசையமையத்துள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு வெளிவரவுள்ளது. தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் வெளியிடுகிறது. மேலும், தெலுங்கில் ‘டப்’ செய்யப்பட்டு, ‘Thegimpu’ என்றப் பெயரில் இந்தப் படம் வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தை, ‘வாரிசு’ படத் தயாரிப்பாளர் தில் ராஜூ, ஆந்திரா மற்றும் தெலங்காளாவில் உள்ள விசாக் மற்றும் நிஜாம் ஏரியாக்களில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தில் விஜய்தான் நம்பர் 1 என்று திரும்பத் திரும்ப கூறி சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், அஜித்தின் ‘துணிவு’ படத்தை தில் ராஜூ வெளியிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விஜய்யின் ‘வாரிசு’ படத்தை, சென்னை, செங்கல்பட்டு, கோவை, வடக்கு ஆற்காடு மற்றும் தெற்கு ஆற்காடு ஆகிய பகுதிகளில் வெளியிடும் உரிமம் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வசம் சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தத் தகவல் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் ‘வாரிசு’ படம் தெலுங்கில் ‘வாரசுடு’ என்றப் பெயரில் அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் அங்கும் இரண்டு நடிகர்களின் படங்களும் மோதவுள்ளது. மேலும் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவியின் படங்களும் பொங்கலை முன்னிட்டு வெளிவரவுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்