பங்குனி பெருவிழா | கபாலீஸ்வரர் கோயிலில் இன்று கொடியேற்றம் https://ift.tt/hmYwqI7

சென்னை: பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா விமரிசையாக நடைபெறும். இவ்விழாவுக்கு சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்நிலையில், இந்தாண்டு பங்குனி பெருவிழா இன்று (மார்ச் 28-ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

முன்னதாக நேற்று கிராம தேவதை பூஜை நடைபெற்றது. மேலும், இரவு 9 மணி அளவில் நர்த்தன விநாயகர் வெள்ளி மூஷிக வாகன திருவீதி உலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, இன்று காலை 7 மணிக்கு கொடியேற்று மண்டபத்தில் இறைவன் எழுந்தருளுவார். காலை 7.30 மணிமுதல் 8.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்வு நடைபெறும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்