திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் https://ift.tt/I7UxasA

திருச்சி: திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர், தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது.

சித்திரை திருவிழாவின் 6-ம் நாளான நேற்று அம்மன் காலையில் நந்தவன திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்து காத்திருந்தார். பின்னர், சுவாமி சீர்வரிசைபொருட்களுடன் திருக்குளத்துக்குச் சென்று, அம்மனுக்கு கொடுத்து அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, மலைக்கோட்டை உள்வீதியில் சுவாமி, அம்மன் வீதியுலா வந்தனர். பின்னர், கோயிலில் மாலை மாற்றுதல் நிகழ்வு நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்