அவிநாசி ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரை சுமந்து வந்த பக்தர்கள் https://ift.tt/MLZGOhX

திருப்பூர்: பருவமழை தவறாமல் பெய்யவும், பொதுமக்கள் பிணியின்றி வாழவும் ஆண்டுதோறும் அவிநாசி லிங்கேஸ்வரர் மற்றும் ஆகாசராயர் கோயில் தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

முன்னதாக அவிநாசியை அடுத்துள்ள ராயம்பாளையத்தில் இருந்து மண்ணால் உருவாக்கப்பட்டு வண்ணம் தீட்டிய குதிரையை அப்பகுதி மக்கள் ஆண்டு தோறும் சுமந்து வந்து ஆகாசராயர் கோயிலில் வைப்பது வழக்கம். அதன் பின்னரே தேர்த் திருவிழா தொடங்கும். அதன்படி நேற்று ராயம்பாளையத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரையை சுமந்து வந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்