பழநியில் மே 27-ல் வைகாசி விசாக விழா கொடியேற்றம் https://ift.tt/TbDrpH2

பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு மே 27-ம் தேதி காலை 11.30 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற உள்ளது. விழாவின் 10 நாட்களும் காலை, மாலை வேளையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவார்.

ஆறாம் நாளான ஜூன் 1-ம் தேதி இரவு 7.15 மணிக்கு மேல் திருக்கல்யாணமும், ஜூன் 2-ம் தேதி காலை 9.30 மணிக்கு மேல் தேரேற்றமும், அன்று மாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டமும் நடைபெற உள்ளது. ஜூன் 5-ம் தேதி இரவில் கொடி இறக்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் தினமும் கலை நிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெற உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

‘உருமாறி, உருமாறி போகவும் தெரியும், பதுங்கி அடிக்கவும் தெரியும்’-கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜன.4 - 10

நல்லதே நடக்கும்