இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆன்மாவையும் உயிரையும் கொடுக்கும் உன்னத கலைஞனின் பிறந்தநாள் இன்று! #YuvanShankarRaja

படம்
ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை என்பது அந்தப் படத்தின் ஆன்மாவை தாங்கிபிடித்து அதன் எல்லாவிதமான உணர்வுகளையும் கொஞ்சமும் குலையால் பார்வையாளருக்கு கடத்தி செல்வதாகும். அந்த அளவிற்கு பின்னணி இசையானது ஒரு நல்ல படத்திற்கு முக்கியமானது. பின்னணி இசையின் முக்கியத்துவத்தை இயக்குநர் பாரதிராஜாவின் வார்த்தைகளிலேயே நாம் புரிந்து கொள்ளலாம். பாரதிராஜா கொடுத்த வெற்றிப் படங்களில் முதன்மையான படம் என்றால் அது ’முதல் மரியாதை’தான். முதல் மரியாதை படம் குறித்து பேட்டி ஒன்றில் பாரதிராஜா பேசிக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட ஒரு காட்சியை பின்னணி இசை கோர்வைக்கு முன்னும் பின்னும் எப்படி இருந்தது என்று விளக்கி இருப்பார். பின்னணி இசையால் அந்த காட்சியினை மிக உச்சமான இடத்திற்கு கொண்டு சென்றிருப்பார் இசைஞானி இளையராஜா. புல்லாங்குழலை வைத்து மேஜிக் செய்திருப்பார். ஆம், ஒரு காட்சிக்கு உயிர் போன்றது அதன் பின்னணி. தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பிறகு எத்தனையோ இசையமைப்பாளர்கள் வந்திருந்தாலும் பின்னணி இசையில் முத்திரை பதித்தவர்கள் சொற்பமானவர்களே. அதில் பின்னணி இசையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வைத்திருப்பவர

ஆந்திராவின் காளஹஸ்தி சிவன் கோயிலில் ராகு - கேது தோஷ பரிகாரத்துக்கு தங்க உருவங்கள் https://ift.tt/kF0wlr2

படம்
திருப்பதி : பஞ்சபூல திருத்தலங்களில் வாயுத்தலமாக விளங்கும் காளஹஸ்தி சிவன் கோயில், ராகு - கேது சர்ப தோஷ நிவாரண திருத்தலமாகவும் விளங்கி வருகிறது. சுவர்ணமுகி நதிக்கரையில் ஞான பூங்கோதை தாயார் சமேதமாய் காளத்திநாதரை தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இக்கோயிலில் அறங்காவலர் குழு கூட்டம் அதன் தலைவர் தாரக நிவாசுலு தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர் இது குறித்து சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட காளஹஸ்தி எம்.எல்.ஏ மதுசூதன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பக்தர்கள் உண்டியல் மூலம் தங்க நகைகளையும், வெள்ளி பொருட்களையும் காணிக்கையாக வழங்கி வருகின்றனர். இதுவரை வெள்ளி பொருட்களை மட்டுமே உருக்கி ராகு - கேது சர்ப தோஷ நிவாரண பூஜையில் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

படம்
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'நட்சத்திரம் நகர்கிறது’ தமிழ் சினிமாவில் புதிய திறப்பு.. நிச்சயம் ஓர் உரையாடல் தொடங்கும்!

படம்
காதலும், காதல் சார்ந்த புனித பிம்பங்களையும், அதன் மூலம் நிகழும் சாதிய அரசியலையும் விசாரணைக்கு உட்படுத்துகிறது பா. இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’. இனியன் (காளிதாஸ்), ரெனே (துஷாரா), அர்ஜூன் (கலையரசன்), யஸ்வந்திரன் (ஹரி கிருஷ்ணன்) எனப் பலரை உள்ளடக்கிய நாடகக் குழு ஒன்று. இந்தக் குழுவுக்குள் பலதரப்பட்ட காதல்கள் இருக்கிறது. அதேபோல் பலதரப்பட்ட சிக்கல்களும் இருக்கிறது. இனியன் - ரெனே இடையே உள்ள காதலில் ஒரு சிக்கல், அர்ஜூனுக்கு காதலையும், சாதியையும் பற்றிய புரிதலே சிக்கல். மேலும் இந்த சமூகத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல், ஒரு ஆணுக்கும் திருநங்கைக்குமான காதல், முதிய வயதுடையவருக்கு வரும் காதல் எனப் பல பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு நாடகத்திற்காகத் தயாராகிறார்கள். அது காதலையும், காதலை சுற்றி சாதிய அமைப்புகள் ஏற்படுத்திருக்கும் ஆபத்துகளையும் பற்றி நாடகம் என்று முடிவாகிறது. இந்த நாடகத்தை உருவாக்கி வெற்றிகரமாக அரங்கேற்றினார்களா? இந்தக் குழுவுக்குள் இருக்கும் ஒவ்வொருவருக்கு இடையிலும் உள்ள முரண்கள் என்ன ஆனது என்பதே படத்தின் கதை. இந்தப

சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் எப்போது? - வெளியான அறிவிப்பு

படம்
சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘டான்’ பட வெற்றியைத் தொடர்ந்து ‘பிட்டாகோடா’, ‘ஜதிரத்னலு’ ஆகியப் படங்களை இயக்கிய அனூதீப்புடன் இணைந்து, தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ‘பிரின்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோசப்கா நடித்துள்ளார். சத்யராஜ், பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் நடிகர் சத்யராஜ் இணைந்துள்ளார். காரைக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வந்தநிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டநிலையில், பின்னர் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஏறக்குறைய படப்பிடிப்புகள் நிறைவடைந்தநிலையில், இன்னும் ஒருசில காட்சிகள் ம

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

படம்
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் - 1’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை, அதே பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இவரது கனவுப் படமான இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், ஜெயராம், பிரபு, ரகுமான், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, நிழல்கள் ரவி, சரத்குமார், ஷோபிதா, பிரகாஷ்ராஜ் உள்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பெரும் பொருட்செலவில் லைகா நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீச

அமலாபாலுக்கு மனரீதியாக தொந்தரவு அளித்தவர் கைது: 11 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

படம்
நடிகை அமலா பாலுக்கு மனரீதியாக தொந்தரவு கொடுத்தது மட்டுமில்லாமல் தொழில் தொடங்கலாம் எனக் கூறி பண மோசடி செய்த வடமாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர். நடிகை அமலா பாலுக்கு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே சொந்த வீடு உள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் திரைப்படத் தொழில் தொடங்குவது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பவிந்தர் சிங் தத் என்ற  ஆண் நண்பருடன் நடிகை அமலாபாலுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், 2018-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே உள்ள பெரியமுதலியார் சாவடியில் இருவரும் வீடு ஒன்றை எடுத்து தங்கி திரைப்படத் தொழில் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக நடிகை அமலா பாலும், அவர் ஆண் நண்பரும் பிரிந்திருக்கின்றனர். இந்த நிலையில், 'இருவரும் ஒன்றாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவேன்' என பவிந்தர் சிங் தத் மற்றும் அவர் உறவினர்கள் நடிகை அமலா பாலை ஏமாற்றி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இதே காரணத்தை வைத்து தன்னிடமிருந்து 23 லட்சம் பணம் மற்றும் சொத்துகளை மோசடி செய்து, மனரீதியாகவும், பொருளாதாரரீதியாக

”பணத்தை திருப்பி தர முடியாது”.. அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.19 லட்சம் மோசடி எனப் புகார்!

படம்
மதுரையில் அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி, இவர் மதுரை மாவட்ட மைய நூலகத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஜாகீர் உஷேன் என்பவர் பாரதிக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பழக்கம் ஏற்படுத்தி கொண்டு பேசியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜாகீர் உசேன், தனது சித்தப்பா சென்னை தலைமை செயலகத்தில் உயர் பொறுப்பில் பணிபுரிந்து வருவதாகவும், எனவே பணம் கொடுத்தால் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாரதி, அவரது உறவினர் நிறைமதி, முரளி சுந்தர் மற்றும் காளீஸ்வரி உட்பட 6 பேரிடம் மொத்தமாக 19 லட்ச ரூபாய் நேரடியாகவும், வங்கி பரிவர்த்தனை மூலம் வாங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களுக்கு வருமான வரித்துறை, ரயில்வே, சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாகவும் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. பணம் கொடுத்து 3 வருடங்களாகியும் அரசு வேலை வாங்கித்தராமல் ஜாகீர் உசேன் தாமதித்துள்ளார். இது குறித்து பணம் கொடுத்தவர்கள் ஜாகீர் உசேனிடம் கேட்ட

‘ஏகே 62’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய்? - கசியும் தகவல்கள்!

படம்
‘ஏகே 62’ படத்தில் நடிகர் அஜித்தின் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘வலிமை’ படத்திற்குப் பிறகு ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் மூன்றாவது முறையாக நடிகர் அஜித் இணைந்துள்ளப் படம் ‘ஏகே 61’. இந்தப் படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. மஞ்சு வாரியர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஹைதராபாத், சென்னை என விறுவிறுப்பாக நடைபெற்ற படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த மாதத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தற்காலிகமாக ‘ஏகே 62’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிகர் அஜித் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் முதலில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நடிக்க, ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகிய

’விராட் கோலியின் ‘பயோபிக்’ படத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’ - ஸ்டார் நடிகரின் ஆசை!

படம்
பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டா, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் ‘பயோபிக்’ திரைப்படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்றப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பீல்டிங்கை முதலில் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆனால் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அந்த அணி 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து, ஆசியக் கோப்பை லீக்கில் தனது முதல் வெற்றியை பதிவுசெய்தது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டாவும் சென்றிருந்தார். போட்டியின்போது எந்த கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்று, தெலுங்கு கிரிக்கெட் வர்

’பேஸ் டிடெக்டர் பயன்படுத்தலாம்’..நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுக்க சிபிஐ-ன் பரிந்துரைகள்

படம்
`பேஸ் டிடெக்டர் போன்ற நவீன கருவிகள், மென்பொருள்களை பயன்படுத்தி, நீட் தேர்வில் முறைகேடு நடக்காமல் தவிர்க்கலாம்’ சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கேரளாவை சேர்ந்த ரஷீத் ஜாமின் என்பவர், உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், "நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக, பல மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையின் போது என் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்த வழக்கில் எனது பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆள்மாறாட்டம் செய்ததாக 10 பேரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டாலும் உறுதியாக ஆள்மாறாட்டம் செய்தவர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகளாக கருதப்படுபவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கின் முந்தைய விசாரணையின் போது, நீட் தேர்வ

தாடியுடன் வித்தியாசமான கெட்டப்பில் விஷால்.. ‘மார்க் ஆண்டனி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

படம்
நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. ‘வீரமே வாகை சூடும்’ படத்திற்குப் பிறகு அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கத்தில், நடிகர் விஷால் நடித்துள்ளப் படம் ‘லத்தி’. காவல்துறை சேர்ந்தவராக இந்தப் படத்தில் நடிகர் விஷால் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் நிறைந்த இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘மார்க் ஆண்டனி’ படத்தில் நடிக்கிறார் நடிகர் விஷால். சிம்புவின் ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’, பிரபுதேவாவின் ‘பஹீரா’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தை இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ்குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். அபிநந்தன் ராமானுஜம் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ கதாநாயகி ரிது வர்மா நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். எஸ் வினோத்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் விஷாலின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்

மதுரையில் ‘கோப்ரா’ பட புரமோஷன் விழா - கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர்கள்

படம்
மதுரையில் நடந்த ‘கோப்ரா’ பட புரமோஷனில் கூட்ட நெரிசலில் சிக்கி கல்லூரி மாணவர்கள் மயக்கம் அடைந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கோப்ரா’ திரைப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் விக்ரம், நடிகைகள் மீனாட்சி, மிருனாளினி ரவி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் பங்கேற்றனர். நடிகர் விக்ரம் வருகைக்காக ஏராளமான மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் ஆடல் ஆடியபடியும், பாடல் பாடியபடியும் காத்திருந்தனர். இதனையடுத்து கல்லூரிக்கு வருகை தந்த நடிகர் விக்ரம் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மத்தியில் கடும் நெரிசலில் சிக்கியபடி வருகை தந்தார். இதனையடுத்து மேடைக்கு வந்தப்பின் நடிகைகள் திரைப்படம் குறித்து பேசியதை அடுத்து நடிகர் விக்ரம் பேசியபோது, “மதுரைக்கு வந்தவுடன் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், மீசைத் தானாகவே மேலே சென்றுவிட்டது. நடிகர் துருவ் விக்ரம் அனைவருக்கும் ஐ லவ்யூ சொல்ல சொன்னார். மதுரை என்றாலே ரொம்ப பிடிக்கும். எனது அப்பா படித்தது அமெரிக்கன் கல்லூரி தான். நான் கல்லூரி படித்த

விக்ரமின் ‘கோப்ரா’ திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடத் தடை

படம்
நடிகர் விக்ரமின் நடிப்பில் வெளியாக உள்ள ‘ கோப்ரா’  திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செவன் ஸ்கீர்ன் ஸ்டுடியோவின் எஸ்.எஸ். லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் நடித்துள்ள  ‘ கோப்ரா’   திரைப்படம் விநாயகர் சதுர்த்தியான ஆகஸ்ட் 31 ஆம் தேதி உலகெங்கிலும் திரைக்கு வரவுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்  இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள  ‘ கோப்ரா’   படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார்.  இந்த படத்தை அரசு மற்றும் தனியாரின் 29 இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக 1788 இணையதளங்களில்  வெளியிடப்படுவதை தடை விதிக்க வேண்டுமென பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, பல மாதங்கள் உழைப்பில், மிகுந்த பொருட் செல

கனடாவில் மீண்டுமொரு 'ஏ.ஆர்.ரஹ்மான் தெரு' - இசைப் புயலின் உருக்கமான பதிவு

படம்
ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரை கனடாவில் உள்ள ஒரு தெருவிற்கு வைத்து கௌரவித்துள்ளது அந்த நாட்டு அரசு. இந்திய சினிமாவின் மிகப்பிரபலமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். ஆங்கிலப் படங்களுக்கும் இசையமைத்து, இரண்டு ஆஸ்கர் விருதுகள் பெற்று உலகம் முழுக்க பிரபலமான நபராக இருக்கிறார். இந்நிலையில் கனடா நாட்டின் Markham என்ற நகரத்தின் தெருவிற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ல் ஒரு முறை இதே Markham நகரின் வேறு ஒரு தெருவிற்கு அல்லா ரக்கா ரஹ்மான் என அவரது பெயரை ஏற்கனவே வைத்தனர். தற்போது இரண்டாவது முறையாக அவரது பெயர் ஒரு தெருவிற்கு வைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு நிகழ்வையும் ஏற்பாடு செய்து கலை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் Markham நகரத்தினர். இந்நிகழ்வில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான பாடல்களை பாடியும், இசைக்கருவிகளில் இசைத்தும் ஏ.ஆர்.ரஹ்மானை கௌரவித்திருக்கிறார்கள். மேலும் இந்த நிகழ்வில் Markham நகர மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். “இப்படியான ஒன்றை என் வாழ்வில் நான் கனவிலும் நினைத்துப் பார்த்ததில்லை. Markham நகரத்து மேயருக்கும், கனடா மற்றும் இந்த

திருச்செந்தூர் கோயிலுக்கு 5 அறங்காவலர்கள் நியமனம் https://ift.tt/Bjvz14M

படம்
சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு 5 அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு பரம்பரைமுறை வழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்ய விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்புவெளியிடப்பட்டது. அவ்வாறு வந்த விண்ணப்பங்கள், 7 பேர் கொண்ட மாநிலக் குழுவால் கடந்த ஜூலை 9-ம் தேதி பரிசீலிக்கப்பட்டது. பின்னர், தேர்வு செய்து பரிந்துரைத்துள்ள நபர்களின் பட்டியலை இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், அரசுக்கு அனுப்பியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சந்தனம் கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு.. ஜவானில் விஜய்சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?!

படம்
கோலிவுட்டின் மசாலா பட இயக்குநர்களில் முன்னணியில் இருக்கும் அட்லீ தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். ஜவான் படம் ஷாருக்கானிற்கு நல்ல கம்பேக்கை கொடுக்குமா இல்லையா என்பதை தாண்டி அட்லீயின் இயக்கம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்ப்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது. நயன்தாரா, யோகிபாபு, பிரியாமணி நடிக்கும் இந்த படம் 2023ம் ஆண்டு ஜூன் 2ல் தமிழ், இந்தி,தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது என்றும், ஜவான் படத்தின் ஓடிடி உரிமத்தை 120 கோடி ரூபாய்க்கு நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது என்பதே சமீபத்திய செய்தியாக இருக்கிறது. இப்படி இருக்கையில், கோலிவுட்டில் ரஜினி, விஜய் என பல மூத்த நட்சத்திரங்களுக்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, ஷாருக்கானிற்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். மேலும் விஜய் சேதுபதி மற்றும் ஷாருக்கான் இடம்பெறும் காட்சிக்கான ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதிக்கு 21 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் பாலிவுட் வட்டாரங்கள் மூல